Posts filed under 'சுற்றுலா'
இயற்கையின் மடியில் இரண்டு நாட்கள்
வெகு நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் மறுபடியும் ஒரு சுற்றுலாவுக்கு சென்றோம். இந்த முறை வடமேற்கு கர்நாடகத்தை சுற்றி பார்க்க எண்ணி, ஜோக் நீர்வீழ்ச்சி, முருதேஷ்வர் மற்றும் கோகர்னா என்று திட்டம் போட்டுக் கொண்டு கிளம்பினோம். எதிர்பார்த்ததை விட சூப்பராக இருந்தது இந்த சுற்றுலா. இரண்டு நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியிலே தான் தவழ்ந்தோம். முதலில் சென்றது ஜோக் நீர்வீழ்ச்சிக்கு தான். அதிகமாக நீர் இல்லை, அதுவும் ஒரு வகையில் நன்றாகவே இருந்தது. நீர்வீழ்ச்சியின் அடிமட்டம் வரை சென்று பார்க்க முடிந்தது. 920 அடி கீழே இறங்கி செல்வது கொடுமையாக தான் இருந்தது, இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் இறங்கிவிட்டோம். ஏறும் போது திண்டாட்டம் ஆகிவிட்டது. கொஞ்ச நேரம் அங்கே ஆட்டம் போட்டுவிட்டு முர்தேஷ்வர் நோக்கி வண்டி சென்றது. மாலையில் அங்கே ஒரு அழகான ஹோட்டலில் ரூம் கிடைக்கவே சந்தோஷமாக சென்றோம் கடற்கரைக்கு. அங்கே சின்ன டென்னிஸ் பந்து ஒன்று வாங்கி, கால்பந்து விளையாட ஆரம்பித்தோம். ஆடிய அரை மணிநேரமும் விறுவிறுப்பாக சென்றது ஆட்டம். கடைசியில் ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்தது. அன்று இரவு நித்திரை என்னும் யாத்திரையில் அனைவரும் மூழ்க்கி இருந்ததால் எப்பொழுதும் ஆடும் சீட் ஆட்டம் ஆட முடியவில்லை.
அடுத்த நாள், கோகர்னா போவதற்கு நேரம் இல்லை என்பதால், சிரிங்கேரி மற்றும் கொல்லூர் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிவிடலாம் என எண்ணீக் கொண்டு கிளம்பினோம். இரண்டு கோயில்கலும் அழகாக இருந்தன. சொல்ல வேண்டிய விசயம் என்னவென்றால், வண்டி சென்ற பாதை தான். ஓரு நாள் முழுதும் மலை மீது தான் பயனம். கொஞ்சம் பயமாக இருந்தாலும், சுற்றி பச்சை போர்வை போத்தியது போல இருந்த மரங்கலும், 180 டிகிரி வளைவுகளும் ரசிக்க வைத்தன. மனிதர்களை அவ்வளவாக பார்க்க முடியவில்லை, வெறும் மலைகளும், மரங்களும், மேகங்கலும் தான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரிந்தது. வரும் வழியில் “ஆகும்பே” என்னும் இடத்தில் உள்ள சில சில இடங்களையும் பார்த்துவிட்டு வந்து சேர்ந்தோம். வடக்கு கர்நாடகம், பெங்களூருக்கு நேர் மாறாக இருந்தது. ஆங்காங்கே வீடுகள், வீட்டை சுற்றி மரங்கள், நதியில் குதித்து விளையாடும் மீன்கள் என இயற்கையோடடு ஒன்றி இருந்தது வியப்பாகவும், சந்தோசமாகவும் இருந்தது.
Add comment அக்டோபர் 11, 2008
கோவாவில் முன்று நாட்கள்
சென்ற வாரம் கோவா சென்று இருந்தேன். சரக்கு அடிப்பவர்களின் சொர்க்கமாக இருந்தாலும், எங்களை போன்ற கூட்டங்களுக்கு என்று ஏகப்பட்ட கடற்கறைகள் இருந்தன. கோடை கால வெயில் மண்டையை பிளந்தாலும், கடற்கறை காற்று இதமாக தான் இருந்தது. கடலில் குளிப்பது, வெளியே வந்து விளையாடுவது என்று இனிதே முடிந்தது கோவா பயனம். கோவா சென்றது ட்ரெயினில், ட்ரெயின் சென்ற வழி அருமையாக இருந்தது. மலைகளின் நடுவே பாதை என்பதால் இயற்கையின் மாசுபடாத அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடிந்தது. வெள்ளிகிழமை கிளம்பி சனிக்கிழமை கோவா சென்றடைந்தோம். சனிக்கிழமை கோல்வா மற்றும் மஜோர்தா என்ற இரண்டு இடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அடுத்த நாள் வண்டியை வாடகைக்கு எடுத்ததால் பல இடங்களை பார்க்க முடிந்தது. பார்தத இடங்கள்,
டோனா பாலா
கோகோ
அகுடா கோட்டை
கலிங்குட்டே
பாகா
திங்கட்கிழமை, கவல்லோசிம், பெனோலிம் மற்றும் கோவாவின் தலைநகரான பனாஜிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினோம். மூன்று நாட்கள் வேலை பற்றி துளி அளவும் நினைப்பு இல்லாமல் சூப்பராக சென்றது.
1 comment April 14, 2008