வெண்ணிலா கபடி குழு
மார்ச் 24, 2009
சொல்ல்வா வேண்டாமா ? ஏற்கனவே பல பேர் சொல்லிருப்பாங்க நாமும் சொல்லனுமா ? தேவையா ? இப்படி எல்லாம் யோசிச்சேன். சரி கடைசியா ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு படம் பார்க்குறோம் எதுக்கு அத பத்தி சொல்லாம இருக்கனும் நினைச்சு சொல்றேன். சில காலமாகவே படம் எதுவும் பார்க்கவில்லை. அபியும் நானும், பூ என ஏகப்பட்ட படங்கள் விட்டு போனதில் வருத்தம். ஹோலிக்காக மார்ச் 11, புதன்கிழமை கம்பெனி லீவ், அதுவும் எங்க கம்பெனி மட்டும் லீவு. சரி வெண்ணிலா கபடி குழு படத்துக்கு போவோம் என முடிவு செய்தோம். புதன்கிழமை தியேட்டரில் எங்களையும் ஒரு பத்து ஜோடிகளையும் தவிர கூட்டம் இல்லை. படம் பார்க்க சென்றவர்கள் நாங்கள் மூவர் மட்டும் என்று தான் நினைக்கிறேன். படத்தில் பெயர் போடும் போது பார்த்தால், அறிமுகம் என்றே ஒரு பெரிய பட்டியல் போட்டிருந்தனர். ஆனால் படம் நன்றாக தான் இருந்தது, ரொம்ப நல்லாவே இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் படம் குதூகலமாக சென்றது. படம்போன வேகமே தெரியவில்லை. வசனங்கள் ரசிக்கும் வகையில் இருந்தது. புதுமுகங்கள் என்றாலும் நடிப்பு நன்றாக தான் இருந்தது. சரண்யா மோகன் மிக குறைந்த நேரமே வந்தாலும் நினைவில் நிற்கிறார். சென்னை 28 மாதிரியே கதை இருக்கிறதோ என்று ஒரு டவுட் வருகிறது. கடைசியில் படத்தில் ஒரு ட்விஸ்ட். அங்க கொண்டு போய் எதுக்கு அந்த டுவிஸ்டுனு இயக்குனருக்கு தான் வெளிச்சம். மொத்தத்தில் படம் சூப்பர், பார்க்கலேனா பாருங்க.
Entry Filed under: தமிழ் திரைப்படங்கள், புலம்பல்கள். குறிச்சொற்கள்: சினிமா, தமிழ் சினிமா, வெண்ணிலா கபடி குழு.
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Senthil | மே 2, 2009 at 3:31 பிற்பகல்
I am bookmarked your blog, will read when I have time.
Thanks for your kirukals…
2.
Senthil | மே 10, 2009 at 6:38 மு.பகல்
Ethavathu eluthunganey….