குட்டையனின் குட்டி கதை

நவம்பர் 14, 2008

அரை மணி நேர பிராயணம் முடிந்து குட்டையனின் வாசலில் வந்து நின்றது என்னுடைய ஸ்கூட்டி. நம்ம செந்தில் இறங்கியவுடன் அவ்வள்வு நேரம் அமுங்கி இருந்த பின் டயர் உடனே எழுந்தது. அதனால் வந்த ஆட்டத்தை சமாளித்துக் கொண்டு வண்டியை நிறுத்தினேன். வீட்டுக்குள் இருந்து குட்டையன் ஒட்டகத்திடம் ஏதோ கத்தி கொண்டு இருந்தான். ஒட்டகமோ அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், குட்டையன் அம்மா வைத்த பலகாரங்களை வாயில் போட்டு அரைத்து கொண்டிருந்தது. வீட்டுக்குள் எட்டி பார்த்தோம், யாரை பார்த்தாலும் குரைத்து அட்டகாசம் செய்யும் டைசனோ தன் வேலையை தன் எஜமானர் எடுத்து கொண்டதால் அமைதியக இருப்பது போல படுத்துக் கிடந்தது. கட்டி போடபட்டிருக்கும் டைசனை சமாளிப்பதில் பிரச்சனையே இல்லை, உள்ளே இருக்கும் குட்டையன் தான் பிரச்சனை. “என்னடா இப்படி கத்திட்டு இருக்கான், கெட்ட வார்த்தைலாம் போட்டு திட்டிட்டு இருக்கான் ? நம்மலதானா ?” என நல்ல பிள்ளை போல் கேட்டான் செந்தில். “நாம நேத்து செஞ்சதுக்கு கொஞ்சவா செய்வான் ?” என்றேன். நினைவுகளில் 24 மணிநேரம் பின் நோக்கி பயனித்தோம்.

காலை 9.30 மணி, பள்ளியில் உணவு இடைவேளை. நான், செந்தில் மற்றும் ஒட்டகம் சாப்பிட்டு முடித்துவிட்டு உட்கார்ந்து இருந்தோம். குட்டையனோ, மின்னலை பின் தொடர்ந்து சென்றுவிட்டான். “மின்னல்” வேற யாருமில்லை, அவன் காதிலிப்பதாக சொல்லி கொண்ட பெண் தான். குட்டையனுக்குள் காதலா என்று நாங்கள் வியந்ததுண்டு, பிறகு தான் தெரிந்தது எங்கே நண்பர்கள் ஏதாவது அட்டு ஃபிகரோடு வைத்து ஓட்டிவிடுவர் என்று எண்ணி குட்டையன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று. ஆனால் நாங்களோ அவனையும் மின்னலையும் சேர்த்து வைத்து பேசுவதே இல்லை, மின்னல் அழகு இல்லை என்றாலும் பார்க்கும்படி இருப்பதால் அவனோடு சேர்த்து பேச மனம் இடம் கொடுப்பதில்லை. இருந்தாலும் நாங்கள் பேச வேண்டும் என்பதற்காகவே குட்டையன் ஏதாவது முயற்சி செய்துக் கொண்டே இருப்பான். அந்த முயற்சியில் ஏதாவது ஒன்றாக தான் இதுவும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டோம்.

இந்த இடத்தில் செந்திலை பற்றி சிறிது சொல்ல வேண்டும், செந்தில் ஒரு நல்ல ஓவியன். எப்பொழுதும் ஏதாவது வரைந்து கொண்டும், எதிலாவது கிறுக்கி கொண்டும் இருப்பான். அன்று அவன் கையில் சிக்கியது குட்டையனின் ஐடி கார்டு தான். சிறுது நேரத்தில் அதில் அழகான ஓவியம் ஒன்று உருவாக்கிவிட்டான். ஐடி கார்டில் இருந்த குட்டையனின் முகத்தில் உதடு மற்றும் கண்ணை தவிற மற்ற அனைத்து இடத்திலும் கருப்பு கலர் அடித்துவிட்டான். ஏன் என்று தெரியவில்லை அது குட்டையன் முகத்தை அகோரமாக்கி இருந்தது ( முதலில் அழகாக இருந்ததானு கேட்காதீங்க :D ). இதோடு நிறுத்தி இருந்தால், குட்டையனும் கூட சேர்ந்து சிரித்திருந்துப்பான். இதோடு நில்லாமல் அவன் ஐடி கார்டு க்ளாஸ் முழுவதும் சுற்றி வர ஆரம்பித்தது. இதை எல்லாம் செய்து முடித்துவிட்டு மெதுவாக மைதானத்துக்கு சென்றுவிட்டோம். மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் தூசி மண்டலம் ஒன்று உருவாகுவது போல தெரிந்தது. ஆகா குட்டையன் தான் ஆக்ரோஷத்தில் ஒடி வந்து கொண்டிருந்தான். வந்து செந்திலை அடிக்க பாய்ந்தான், அந்தோ பரிதாபம் PT வாத்தியாரிடம் மாட்டிக் கொண்டான். அவர் வைத்த குட்டில் அவன் மண்டை வீங்கியது தான் மிச்சம். எப்படியோ அன்று அவனிடம் இருந்து தப்பி வீட்டுக்கு சென்றோம். பஸ்சில் போகும் பொழுது ஏதோ ஒரு கிராதகன் ஐடி கார்டு பெண்கள் பக்கம் சென்ற விசயத்தை குட்டையனிடம் சொல்லி இருக்ககிறான்.அதனால் தான் இன்னும் குட்டையனின் கோபத்திற்கு காரணம்.

ப்ளாஷ்பேக் முடிந்தது. இன்னும் வீட்டுக்கு வெளியில் தான் நின்று கொண்டிருந்தோம். வாரம் வாரம் குட்டையன் வீட்டுக்கு சென்று சேர்ந்து படிப்பது வழக்கம். சரி நம்ப மாட்டீங்க, குட்டையன் வீட்டு சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். குட்டையன் படு ஹாட்டாக் இருந்தான். உள்ளே நுழைந்தவுடன் தவ்வி விட்டான் ஒரு குத்து செந்திலின் நெஞ்சில். என்னதான் பையன் குட்டை என்றாலும் வானில் இரண்டடி தவ்வி அடிப்பதில் கெட்டிகாரன். அடுத்து கேள்வி கனைகளை தொடுக்க ஆரம்பித்தான். “ஏன்டா அப்படி பண்ணீங்க ?, ஏன்டா பாஸ் பண்ணிவிட்டீங்க ?, சரி ஏன்டா பொண்ணுக பக்கம் கொடுத்தீங்க ? , என் இமேஜே போச்சு டா”,  என அடுக்கிக் கொண்டே போனான் குட்டையன். இதுவரை நொறுக்கு தீனிகளை அரைத்து கொண்டிருந்த ஒட்டகம் எழுந்தான். “ஏன்டா குட்டையா, இல்லாத இமேஜுக்கு ஏன்டா இவ்வளவு பில்டப்பு” என்றான். குட்டையனுக்கு கொஞ்சம் அவமானமாகி போனாலும் மறுக்க முடியாத உண்மை என்பதால், அமைதியாக இருந்தான். “இல்லடா பொண்ணுக எல்லாம் பார்த்து சிரிச்சாங்கடா” என்றான் குட்டையன் பாவமாக. எனக்கும் செந்திலுக்கும் மனம் லைட்டாக வருத்தபட்டது. எதற்காக ? குட்டையனுக்காகவா ? ச்ச ச்ச இல்லவே இல்லை. அந்த காட்சியை நாம் காணமுடியவில்லையே என்ற வருத்தம் தான். ஆனால் ஒட்டகமோ அசரவில்லை, “இது என்ன புதுசா ? இதுக்கு முன்னாடி உன்னை பார்த்து சிரிச்சதில்லையா ? புதுசா அசிங்க படுற மாதிரி ஏன்டா பிட்ட போடுற ? போ போய் உட்காரு, வா டிவி பார்க்கலாம்” என்று முடித்தவுடன் குட்டையனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பிறகு பொழுது மதியம் நல்ல சாப்பாடு, டிவி என முடிந்தது.

சரி இவ்வளவு சொல்லிட்டு கதையின் நீதி சொல்லவில்லை என்றால் எப்படி, “இல்லாத இமேஜை காப்பாற்ற கஷ்ட படாதீங்க”. சரி இது உங்களுக்கு பொருந்துமானு கேட்காதீங்க, பதில் சொல்ல மாட்டேன்.

Entry Filed under: கதை, கற்பனை, புலம்பல்கள். குறிச்சொற்கள்: , .

2 Comments Add your own

  • 1. kamati  |  நவம்பர் 25, 2008 at 6:07 பிற்பகல்

    It not imprese me……….

    பதில்
  • 2. senthilkumaran  |  நவம்பர் 27, 2008 at 5:07 மு.பகல்

    உண்மை தான், என் நண்பர்களுக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும், மற்றவர்களுக்கு தெரியவில்லை. கருத்துக்கு நன்றி.

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

நவம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
« அக்   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்