திக் திக் திக்

நவம்பர் 12, 2008

தெரியாமல் இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமோ என்ற எண்ணம் அப்பொழுது தான் செந்திலாகிய எனக்கும் செந்திலுக்கும் வந்தது. அப்படி ஒரு கும்மென்ற இருட்டை நாங்கள் பார்த்ததில்லை. நம்ம கண்ணுக்கு ஏற்கனவே நல்ல பவரு, இதுல இந்த இருட்டு வேற, விளங்கின மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வெளியே செல்லும் வழி தெரியவில்லை, ஆனால் என்னிடம் இருந்த  தைரியமோ எப்படியோ வழியைக் கண்டுபிடித்து ஸ்டாப் கியர் போட்டு பறந்துவிட்டது. “மாப்பு வைச்சுடான்டா ஆப்பு” என்ற டயாலாக்குடன் நடக்க ஆரம்பித்தோம். இரண்டு அடிகள் தான் எடுத்து வைத்திருப்போம் அருகில் யாரோ அலருவது போன்று தோன்றியது, உரைந்து போய் நின்றோம். நடக்கவே ஆரம்பிக்கவில்லை, நகர மறுத்தன கால்கள். சரி நம்ம தான் பயப்படுகிறோம் நம்ம கூட வந்த பையன் தைரியசாலி என்று நினைத்தால் அப்பொழுது தான் தெரிந்தது ஆள் சைஸ் தான் பெரிசு மத்தபடி எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டைதான் என்று புரிந்தது. இரண்டு அடி எடுத்து வைத்தோம், ஏதோ ஒரு துணி முகத்தில் பட்டது போன்ற தோன்றவே போட்டோம் ஒரு சடன் ப்ரேக். வியர்த்து ஊத்த ஆரம்பித்துவிட்டது. “என்ன கொடுமை சார் இது” வந்த வழியாகவும் செல்ல முடியவில்லை, முன்னேறி செல்லவும் முடியவில்லை, அந்த இடத்திலே நிற்கவும் முடியவில்லை. என்ன செய்வது ? தலைநகரம் வடிவேலின் கால்கள் போல நடுங்கி கொண்டிருந்தன செந்திலின் கால்கள், என்னோடது இல்லீங்க அருகில் இருந்த நண்பன் செந்திலின் நிலமை இது. சரி நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்கனு கேட்கலாம், இந்த கேள்விக்கு பதில் வந்து “பாஸ்”. சரி “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா” என்று எங்களை நாங்களே தேற்றி கொண்டு மேலும் நடந்தோம். “டேய் என்னடா அங்க இருக்கது”னு கேட்டான் செந்தில். “டேய் ஏன்டா உங்க தாத்தா சட்டை இல்லாம ஆடுர மாதிரி இருக்கு” என்றேன். “ஒழுங்கா பாருடா” என்றான் செந்தில். “டேய் அது தான் எழும்புக்கூடா டா” என்று கேட்டுக்கொண்டே அவனை பார்த்தேன், பார்த்தால் பையன காணோம். நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடிக் கொண்டு இருந்தான். இவனல்லவோ  நண்பன்  என்று மெச்சிக் கொண்டு, மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். சரி சரி ஓகே, ஓட ஆரம்பித்தேன். கடைசியில் ஒரு சிறிய ஓட்டை வழியாக லைட் வருவது தெரிந்தது. அடித்து பிடித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே வந்து நின்றோம். அட்ஜஸ்ட் பண்ணிவிட்டு வீரட்கள் போல போஸ் கொடுக்க எண்னிணோம், ஆனால் பார்த்து சிரிப்பதற்கு ரெடியாக இருந்தனர் இருபது பேர்.
எங்கிருந்து வராங்கனு தெரியல, இதுக்கு மட்டும் கரெக்டா வந்துராங்க என்று நொந்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகன்றோம்.

இன்று செந்திலோடு தொலைபேசியில் பெசிய பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு “ஸ்கேரி ஹவுசில்” நடந்தவை கண் முன்னே வந்து விட்டு சென்றன, அது தான் நீங்கள் மேலே படித்தது. இன்றைய தீர்மானம், ஓசியா கூப்பிட்டா கூட இனி அந்த பக்கம் தலை வைச்சு படுக்க மாட்டோம்.

Entry Filed under: என்னை பற்றி, புலம்பல்கள், வாழ்க்கை. குறிச்சொற்கள்: , .

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

நவம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
« அக்   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்