தசாவதாரம்

ஜூன் 26, 2008

இரண்டு வாரங்களுக்கு முன்பு தசாவதாரம் படம் பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. சும்மா சொல்ல கூடாது கமலும் கே.ஸ்.ரவிகுமாரும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். படத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம், தேவையான இடங்களில் திறமையாக பயன்படுத்தி இருக்கின்றனர். சென்னையை சேட்டிலைட் மூலம் காட்டுவதில் தொடங்கி கடைசியில் சுனாமி வரை சூப்பராக இருக்கின்றன காட்சிகள். பத்து வேடங்களில் வந்தாலும் இரண்டு மூன்று வேடங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. படத்தை பார்த்து முடித்தவுடன் படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. பாமரனுக்கு படம் புரியுமா என்றால் புரியாது என்றே தோன்றுகிறது. எதுவும் பார்த்த உடன் புரிவது போல இல்லை. இயற்பியல் சமாச்சாரங்கள் படத்தில் புதைந்து கிடக்கின்றன. அதை யோசித்து பார்த்தால் தான் படத்தின் பிரமான்டமும், இது தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது என்பது புரியும். “Chaotic theory” என்பதை வைத்து தான் படத்தின் கதை மற்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால் படத்தில் அதை பற்றி எதுவும் சொல்லவில்லை. ரசிகர்களின் கற்பனைக்கு விட்டுவிட்டனர்.

சரி புரியாததை விட்டு விடுவோம், வழக்கமானவை என்ன இருக்கிறது என்று பார்த்தால், எல்லாம் இருக்கிறது. அசர வைக்கும் சண்டை காட்சிகள், கமலின் அபார நடிப்பு, அசினின் வழக்கமான வாய் மூடாத பேச்சு என அனைத்தும் இருக்கின்றன. கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம். தமிழில் ஒரு புதுமையான படம் என்றும் சொல்லலாம்.

Entry Filed under: தமிழ் திரைப்படங்கள், புலம்பல்கள். குறிச்சொற்கள்: , .

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

ஜூன் 2008
தி செ பு வி வெ ஞா
« மே   ஆக »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்