தசாவதாரம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு தசாவதாரம் படம் பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. சும்மா சொல்ல கூடாது கமலும் கே.ஸ்.ரவிகுமாரும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். படத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம், தேவையான இடங்களில் திறமையாக பயன்படுத்தி இருக்கின்றனர். சென்னையை சேட்டிலைட் மூலம் காட்டுவதில் தொடங்கி கடைசியில் சுனாமி வரை சூப்பராக இருக்கின்றன காட்சிகள். பத்து வேடங்களில் வந்தாலும் இரண்டு மூன்று வேடங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. படத்தை பார்த்து முடித்தவுடன் படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. பாமரனுக்கு படம் புரியுமா என்றால் புரியாது என்றே தோன்றுகிறது. எதுவும் பார்த்த உடன் புரிவது போல இல்லை. இயற்பியல் சமாச்சாரங்கள் படத்தில் புதைந்து கிடக்கின்றன. அதை யோசித்து பார்த்தால் தான் படத்தின் பிரமான்டமும், இது தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது என்பது புரியும். “Chaotic theory” என்பதை வைத்து தான் படத்தின் கதை மற்றும் காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால் படத்தில் அதை பற்றி எதுவும் சொல்லவில்லை. ரசிகர்களின் கற்பனைக்கு விட்டுவிட்டனர்.

சரி புரியாததை விட்டு விடுவோம், வழக்கமானவை என்ன இருக்கிறது என்று பார்த்தால், எல்லாம் இருக்கிறது. அசர வைக்கும் சண்டை காட்சிகள், கமலின் அபார நடிப்பு, அசினின் வழக்கமான வாய் மூடாத பேச்சு என அனைத்தும் இருக்கின்றன. கண்டிப்பாக குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய படம். தமிழில் ஒரு புதுமையான படம் என்றும் சொல்லலாம்.

Add comment ஜூன் 26, 2008

சந்தோஷ் சுப்ரமணியம்

ஜெயம் ரவியின் மற்றோரு ரீமேக். படம் சூப்பராக இருந்தது. படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் கதயை சொல்லிவிடுகின்றனர். சிறு வயதில் கை பிடித்து நடக்க வைக்கும் அப்பா, 24 வயது வரை, கையை பிடித்து கொண்டே இருந்தால் என்ன நடக்கும் என்பது தான் கதை. 24 வயது பையனுக்கு எப்படி பூரி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் கொஞ்சம் அதிகம் அக்கறை காட்டும் அப்பாவாக பிரகாஷ் ராஜ் கலக்கி இருக்கிறார். வாழ்க்கையில் தான் பார்க்கும் வேலை மற்றும் மணக்கும் பெண் இரண்டு மட்டுமாவது தானே முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் ரவியை ஈர்கிறது ஜெனெலியா வாழ்க்கையை வாழும் முறை. ஜெனெலியா கவர்வது ரவியை மட்டும் அல்ல நம்மையும் தான். குழந்தை பொன்ற நடிப்பில் நன்றாக நடித்திருக்கிறார்,ஜெனெலியா. காமெடி நன்றாக அமைந்துள்ளது. பாஸ்கர் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் நடிப்பை கண்டு வெடிக்கிறது சிரிப்பு. பாட்டுகள் அருமை. மொத்தத்தில் சந்தோஷ் சுப்பிரமணியம், குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல படம்.

1 comment மே 3, 2008

ஐ.பி.எல். டுவென்டி டுவென்டி

சென்ற வாரம் சென்னைக்கும் பெங்களூருக்கும் நடந்த ஐ.பி.எல். டுவென்டி டுவென்டி கிரிக்கெட் மேட்ச்சுக்கு சென்றிருந்தேன். விளையாட்டு ஒரு பக்கம் இருக்க ஆட்டம் பாட்டம் என மற்றொரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்னையின் ஆதரவாளர்களாக அமர்ந்து இருந்தோம். பெங்களுருக்கு தான் ஆதரவு அதிகம் என்றாலும், தமிழன் இல்லாத இடம் உண்டா ? சிறிது நேரத்தில், சென்னையின் ஆதரவாளர்களாக தமிழர்கள் ஒன்று கூடிவிட்டனர். அதற்கு அப்பறம் என்ன ஒரே ஆட்டம் தான். ஒவ்வொரு பவுண்ட்ரிகளூக்கும் நம் மக்களீன் ஆரவாரம் பெங்களுர் மக்களை எரிச்சல் அடைய வைத்திருக்கலாம், ஆனால் அதற்காக நாம், கவலை பட முடியுமா என்ன ? கடைசியில் சென்னை ஜெயித்த போது எழுந்த சத்தம் வானை பிளக்க, கொடுத் காசு வீண் போகவில்லை என்று ஒரு சந்தோசம்.

டுவென்டி ட்வென்டி முறை நன்றாக இருக்கிறது. ஆட்டம் முழுவதும் விறுவிறுப்பு, விக்கெட் விழும் போது பறபறப்பு, பவுண்ட்ரிகள் பறக்கும் போது குதுகலிப்பு என அனைத்தும் நான்கு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. எப்படி போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம், இந்த டுவென்டி டுவென்டி.

Add comment மே 3, 2008

மொக்கைகள்

கோவா சென்ற போது என்ன என்று தெரியவில்லை அனைவரும் மொக்கை போடும் மூடில் இருந்தனர். “லொல்ளு சபா” பார்த்த பாதிப்பு என்று நினைக்கிறேன். மக்கள் போட்ட மொக்கைகளில் சில,

கோவாவில் உள்ள ஃபெரியின் அருமை பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார் ஒரு அண்ணன்.

அண்ணன்: முன்னாடி எல்லாம் இதுல கூட்டமே இருக்காதாம்
நான்: அப்ப பின்னாடி கூட்டம் இருக்குமா.

அண்ணன் என்ன நினைத்தார் என்று தெரியவிலலை, அதன் பிறகு அதை பற்றி பேசவே இல்லை.

கோவாவில் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம், பேருந்து செல்லும் வழி இயற்கை காட்சிகள் மிகுந்து அழகாக இருந்தது,

அண்ணண்: அப்படியே கேரளாவில் போற மாதிரி இருக்கு டா.
நான்: அப்ப பஸ்ல போற மாதிரி இல்லையா ?

அருகில் இருந்த இன்னொரு அண்ணன் பதிலுக்கு மொக்கை போட ஆரம்பித்து விட்டார், அதனால் நான் நிறுத்திவிட்டேன்.

மேலும் சில பேர் சில இடங்களில் மொக்கை போட்டனர், பல மறந்து போய்விட்டது, நினைவுக்கு வரவில்லை வந்தால் வலைப்பதிவில் அடிக்கிறேன். மொக்கை போடுவது போடுபவர்களுக்கு நன்றாக இருக்கலாம், கேட்பவர்களுக்கு கஷ்டம் தான்.

2 comments ஏப்ரல் 15, 2008

கோவாவில் முன்று நாட்கள்

சென்ற வாரம் கோவா சென்று இருந்தேன். சரக்கு அடிப்பவர்களின் சொர்க்கமாக இருந்தாலும், எங்களை போன்ற கூட்டங்களுக்கு என்று ஏகப்பட்ட கடற்கறைகள் இருந்தன. கோடை கால வெயில் மண்டையை பிளந்தாலும், கடற்கறை காற்று இதமாக தான் இருந்தது. கடலில் குளிப்பது, வெளியே வந்து விளையாடுவது என்று இனிதே முடிந்தது கோவா பயனம். கோவா சென்றது ட்ரெயினில், ட்ரெயின் சென்ற வழி அருமையாக இருந்தது. மலைகளின் நடுவே பாதை என்பதால் இயற்கையின் மாசுபடாத அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடிந்தது. வெள்ளிகிழமை கிளம்பி சனிக்கிழமை கோவா சென்றடைந்தோம். சனிக்கிழமை கோல்வா மற்றும் மஜோர்தா என்ற இரண்டு இடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அடுத்த நாள் வண்டியை வாடகைக்கு எடுத்ததால் பல இடங்களை பார்க்க முடிந்தது. பார்தத இடங்கள்,

டோனா பாலா
கோகோ
அகுடா கோட்டை
கலிங்குட்டே
பாகா

திங்கட்கிழமை, கவல்லோசிம், பெனோலிம் மற்றும் கோவாவின் தலைநகரான பனாஜிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினோம். மூன்று நாட்கள் வேலை பற்றி துளி அளவும் நினைப்பு இல்லாமல் சூப்பராக சென்றது.

Add comment ஏப்ரல் 14, 2008

சும்மா

வானவில்லின் ஏழு வண்ணங்கள்
அழகு என்றனர், பாவம்
அவர்களுக்கு எங்கே தெரியும்
உன் முன்னால் வானவில்லும்
தூசு தான் என்று.

காதலை பற்றியும் பெண்ணை பற்றியும் கவிதை எழுதுவது சுலபம் என்றான் நண்பன், அதுக்கு தான் இந்த முயற்சி.

Add comment மார்ச் 28, 2008

பொற்காலம்

சுற்றி திரிந்தேன் சுதந்திரமாக
கல்லூரி என்னும் கூட்டுக்குள்
செய்யாத சேட்டைகள் இல்லை
குறும்புகள் குற்றம் இல்லை
இருந்தது வகுப்பறையில்
கேட்டதோ நண்பர்களின் காதல் கதைகள்,
படித்தது பரீட்ச்சைக்கு முன்னால்
மதிபெண் கண்டு வருந்தியதில்லை பின்னால்
துயரங்கள் கண்டு துவண்டதில்லை
நண்பர்கள் என்றும் பிரிந்ததில்லை
மரத்தடி பேச்சுகள் மறக்கவில்லை
இறக்கும் வரை அழிய போவதுமில்லை
எல்லாம் நடந்தது அன்று
நினைவில் கலந்து நிற்கின்றன இன்று
நிற்கும் என்றென்றும்

1 comment மார்ச் 28, 2008

பல்வகை மனிதர்கள்

தமிழ் வலைப்பதிவில் எதாவது அடித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. அடிப்பதற்கு நேரமும் கிடைப்பதில்லை, பகிர்ந்து கொள்வதற்கு பெரிதாக எதுவும் நடக்கவும் இல்லை. சரி நடந்து முடிந்தது எதாவது பற்றி அடிக்கலாம் என்று நினைத்தேன. கிடைத்தது இது தான். ஒரே நாளில் நடந்த இரண்டு சம்பவங்கள பற்றி தான் இது.

ஓரு நாள் திருத்தங்கல் சென்று இருந்தேன். கோவிலுக்கு செல்லும் முன் செருப்பு வைக்கும் இடம் இல்லை என்பதால் ஒரு கடையில் வி்ட்டு விட்டு சென்றோம். தரிசனம் முடிந்து வந்து செருப்புகளை எடுத்துவிட்டு அந்த கடை காரருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தோம். வாங்க மறுத்து விட்டார். “நான் இதற்காக இந்த வேலையை செய்யவில்லை” என்றார், சரி என்று இரண்டு விளக்குகள் வாங்கி விட்டு வந்து விட்டோம்.

விருதுநகரில் சாப்பிடலாம் என்று நினைத்து இறங்கினோம், அங்கேயும் ஒருவர். நன்றாக தான் இருந்தார், எங்கள் அருகே வந்து காசு கேட்டார். இரண்டு ரூபாய் கொடுத்தோம், இரண்டு ரூபாய் போதாது என்று அடம் பிடித்தார். எங்கு சென்றாலும் பின்னாடியே வந்து தொல்லை பன்னினார். ஆனால் நாங்கள் எதுவும் கொடுக்க வில்லை, இடத்தை காலி செய்து விட்டு கிள்ளம்பிவிட்டோம்.

முதல் சொன்ன மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். விருதுநகரில் பார்த்தவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு.

Add comment பெப்ரவரி 10, 2008

பில்லா

“பில்லா” என்று பார்த்தால் முதல் ரீமேக், டான் என்று பார்த்தால் நான்காவது ரீமேக் ஆனால் புதிதாக தான் இருந்தது. புதிதாக வெளிவந்த டான் படம் போல் செட் எல்லாம் இருக்கிறது என்று நண்பர்கள் கூறுகின்றனர், அந்த படம் பார்க்காததால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விஷ்ணுவர்தன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார். அஜித்தை இப்படி ஒரு ஸ்டைலில் பார்த்ததே இல்லை. படம் முழுவதும் கருப்பு சட்டை அல்லது வெள்ளை சட்டை, கண்ணில்   ஒரு கூலிங் கிளாஸ் என சூப்பராக இருக்கிறார் அஜித். சில படங்களில் அதிகமாக பேசி எதாவது செய்வார். இந்த படத்தில் அது எதுவும் இல்லை. நடை மற்றும் உடையிலும் கலக்கி இருக்கிறார் அஜித். நமீதா எப்பவும் மாதிரி தான் ஒரு பாட்டு, கொஞ்சம் வசனம் கொஞ்சம் உடை என வலம் வருகிறார். நயன்தாராவுக்கு நமிதாவை விட கொஞ்சம் பெரிய ரோல் அவ்வளவு தான். பிரபுவுக்கு இன்ஸ்பெக்டர் வேடம், ஆனால் அவர் வந்த உடனே ரசிகர்கள் சிரிக்கின்றனர், அது ஏன் என்று தான் புரியல. படத்தின் முக்கிய அம்சம் மேட்சிங் மேட்சிங்காக இருக்கும்  பேக்கிரவுண்ட் மற்றும் அதுக்கு  ஏற்ற மாதிரி இருக்கும் ஆடைகளும் தான். அஜித் ரஜினி மாதிரி ஆட முயற்சித்தாரா இல்லையா என்று தெரியவில்லை, ஸ்டெப் போட்டு ஆடி இருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம் ரஜினி ஆடினா அசிங்கமா தெரியாது ஆனா அஜித் ஆடினா அப்படியே தெரியுது. மற்றபடி படம் சூப்பர். ஒரு புது அஜித்தை படத்தில் பார்க்கலாம்.

3 comments டிசம்பர் 16, 2007

பிரியமுடியாதவை

ஞாயிற்று கிழைமை, வீட்டில் ஒரு வேலையும் இல்லாமல் உட்கார்ந்து இருந்தேன். நேரம் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க, நானோ அதை தடுக்க பல முயற்சிகள் எடுக்க, கடைசியில் ஜெயித்தது என்னவோ நேரம் தான். குப்புற படுத்து பார்த்தேன், புத்தகம் படித்து பார்த்தேன், FM கேட்டு பார்த்தேன் ஒன்றும் நடக்கவில்லை. வர வர ஞாயிற்று கிழமைகளில் பொழுதை போக்குவது மிகவும் கொடுமையாக உள்ளது. நண்பர்கள் கூடினால் சில நொடிகள் போல தோன்றும், தனியாக இருந்தால் தான் தெரிகிறது. தொலைக்காட்சியும், கம்ப்யுட்டரும் இல்லாமல் இருப்பது கஷ்டமாக தான் இருக்கிறது. பொழுதுபோக்குக்காக வந்தவை பிரிய முடியாதவையாகி விட்டது. ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.

1 comment நவம்பர் 18, 2007

Previous Posts


 

ஜூலை 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூன்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

அண்மைய இடுகைகள்